விருதுநகர், ஜன.3: ஆங்கிலவழி கல்வி துவங்க உள்ள அரசுப்பள்ளிக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. விருதுநகர் ஒன்றியம் மீசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 70 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு புதிதாக வரும் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சீர்வரிசை ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பள்ளியை வந்தடைந்தது.
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடந்து நடைபெற்ற விழாவில் ஒன்றிய கல்வி அலுவலர் ராம லட்சுமி தலைமையில் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் கிராம செவிலியரும் ஜனாதிபதி விருது பெற்ற முன்னாள் மாணவருமான மங்கம்மா சிறப்புரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி சாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஆங்கிலவழி கல்வி துவங்கும் அரசுப்பள்ளிக்கு சீர்வரிசை appeared first on Dinakaran.